Sunday, September 6, 2009

57. கொங்கதேச வன்னியர் குலகுருக்கள்

57. கொங்கதேச வன்னியர் குலகுருக்கள் 

கொங்கதேசத்தில் இருக்கும் வன்னியர்கள் இரு பிரிவினர்:


1. இந்திர வன்னியர் - அரசப்பள்ளி - சிதம்பரத்திற்கு கிழக்கு கடல் மட்டும் உள்ளவர்கள். களந்தை (திருக்கழுக்குன்றம்கூற்றுவ நாயனார் (ருத்திர பள்ளியார்) வம்சாவளி. இன்றும் கூத்தாண்டவர் (கூற்றாண்டவர்) என கூவாகம் போன்ற பல ஊர்களிலும், குட்டியாண்டார் என பிச்சாவரத்திலும், அதே அந்தியூரில் குன்னாசாமி (கூற்றுவநாயனார் சாமி) என்பது மருவி குருநாதசாமி எனவும் ருத்ர பள்ளியார் வழிபடப்படுகிறார்.

கண்டர் என்பது பாரம்பரிய பட்டப்பெயர். சேலம் கண்டகுலமாணிக்கம், கொடுமுடி ஏமகண்டனூர், சின்னக்கண்டனூர் என்ற பெயர்கள் இதனைப் பகரும். தற்போது கண்டர் என்பதனைச் சிலர் கவுண்டர் என்று தவறுதலாகப் போடுகின்றனர்.

 1692இல் முகலாய பகுதியாக சிதம்பரம், ஆர்காடு  நவாப், நவாப் ஜுல்பிகர் கான் நுஸ்ரத் ஜங்க்கு சேர்ந்து, அவன் பெண் கேட்டதால் சிதம்பரம் பகுதியிலிருந்து  மைசூர் சிக்க தேவராஜ உடையார் பகுதியாக சேர்ந்த கொங்கதேசத்துக்கு வந்தவர்கள்.
சேர நாடான கொங்கதேசத்திற்கு பந்தமுட்டு வன்னியர்கள் வந்தவுடன்,குருவுக்கு எழுதி கொடுத்த பட்டயம்

விஜயநகர காலத்தில் படை ஆட்சிப்பொறுப்பில் நியமிக்கப்பட்டனர். பள்ளிகளுள் அரச வம்சமான (அரசப் பள்ளி, இந்த்ர வன்னியர்) கூற்றுவர் வம்சத்திற்குப் பிச்சாவரம் பாளையப்பட்டு தஞ்சை நாயக்கர்களால் அளிக்கப்பட்டது. ஆனால் துளுவ, ஆரவீடு வம்சத்தார் விஜயநகரைக் கைபற்றியவுடன், மோதல் ஏற்பட, அதே சமயம் முகலாயர் ஒளரங்கசீப்பின் மந்திரி நிஜாம் விஜயநகரத்தை (சந்திரகிரி) துவம்சம் செய்ய 1692 இல் அவர்களது தளபதி
ஆற்காடு நவாபு கைப்பற்றிய காலத்தில் நவாபோடு சமரசம்செய்தவர்களுக்கு
 பிச்சாவரம் ஜமீந்தாரி பாளையப்பட்டு வழங்கப்பட்டது . விஜயநகரத்திற்கு நன்றியுடன் தன்மானம் காக்க விஜயநகரத்தின் எச்சமான மைசூர் சமஸ்தானத்தில் இணைந்துவிட்ட கொங்கதேசத்தில் ரெட்டியார் அதிகாரிகளும், கூற்றுவர் வாரிசுகளுக்கும் அந்தியூர் அதிகாரிகளான கொங்க வெள்ளாளர்,நரம்பர் ஆகியோர் தஞ்சம் அளித்தனர். இனறுவரை இதனால் ரெட்டிகளும், தஞ்சமளித்த கொங்கருக்கும் அந்தியூர் தேர் விழாவில் இந்த தியாக வம்சத்தால் உரிமைகள் அளிக்கப்பட்டு வருவது பிரசித்தம். இவர்களுடன் இவர்களது புரோகிதர்களான தெலுங்கு பிராமணர்கள் - பரத்வாஜ, ஸ்ரீவத்சவ, சாண்டில்யர், கௌதமர், ஹரிதச, பராசர கோத்திரத்தவர்களும் வந்தனர். அவர்களுக்கும் சாமியே குலதெய்வம்!

மேலும் குடிகளான பள்ளி நகதகர், பள்ளி கம்மாளர் (அவர்களது ஊர்கள் கீற்கண்ட மட சிஷ்யர்கள் பட்டியலில்), பள்ளி எகிலியர், பள்ளி இடையர், பள்ளி வேடர், கள்ளர், மறவர், பள்ளி சக்கிலியர் ஆகியோரும் உடன் வந்தனர். தியாக வம்சம் (அந்தியூர் குருநாதசாமி குடிப்பாடு) வரலாறு:




துரோக வம்ச (பிச்சாவரம் குட்டியாண்டார் குடிப்பாடு) வரலாறு:

இஸ்லாமிய ஜமீன்தாரி உடையில் தற்போதைய ஜமீன்


அரசப்பள்ளிகள் கோத்திரங்கள்: (இந்திர கோத்திரம், வீர கோத்திரம், விஜய கோத்திரம், தாரா கோத்திரம், ததி கோத்திரம்).

இவர்களுடன் இவர்களது புரோகிதர்களான தெலுங்கு பிராமணர்கள் - பரத்வாஜ, ஸ்ரீவத்சவ, சாண்டில்யர், கௌதமர், ஹரிதச, பராசர கோத்திரத்தவர்களும் வந்தனர். மேலும் குடிகளான நகதகர், வன்னிய கம்மாளர், வன்னிய எகிலியர், வன்னிய இடையர், வன்னிய வேடர், கள்ளர், மறவர், சக்கிலியர் ஆகியோரும் உடன் வந்தனர்

இடங்கை வலங்கை வன்னியர் பட்டயத்தில் இவ்விஷயங்கள் உள்ளன.

 இதில் இக்குடியினர் ஒட்ர தேசம் (ஒடிஷா) ஆதியாக உடைவர்கள், சேர, சோழ, பாண்டியரை சிறை வைக்க சாலிவாஹனன் (சாதவாகனன்) படைக்குஆட்சியாக வந்ததாகவுள்ளது. "பள்ளி"யென்ற பெயர்  தமிழ், திகள கன்னட பள்ளி, கிருஷ்ண வன்னியர் (தெலுங்கு மட்டுமே பேசும் ஆந்திர வன்னியர்)களது கிராம ஜாதி சபையைக் குறிப்பதாகும். 



தற்காலத்திலும் "பள்ளி சபா"யென்று கிராமப்பொதுச் சபைக்குக் கட்டுப்படாத ஜாதி தன்னாட்சி அமைப்புகளை தொங்காரியா கொண்ட (மலைக்கள்ளரென அர்த்தம்!) ரென்ற வன்னியர், கள்ளர், மறவரது முன்னோர்களான மத்திய பாரத (குகன் வாரிசுகள்) பூர்வகுடி மக்கள் (நாகர் - சம்ஸ்கிருதப் பெயர்) நடத்தி வருகின்றனர்.


தொங்கரியா கொண்டர்களுக்கும், வன்னியர் கிளை குடிகளான கள்ளரோடுள்ள, வரைமுறைகள், தோற்ற, சடங்கு, பழக்கவழக்கவொற்றுமைகள் பூர்வீகத்தை பறைசாற்றும்.



தொங்கரிய கொண்டர்கள் கூற்றுக (கூற்றுவ)வென்று பெயர் வைப்பது மரபு!

மேலும் பூமராங் வேட்டை, மரபியல், கலாசாரத்தில் வன்னியர் மற்றும் கிளையான முக்குலத்தோர் தொங்கரியா கொண்டர்களோடு தொடர்புடையவர்கள்!


வேடுவர் பட்டயங்களில் வன்னியர் கிளை குடிகளை ஒட்டிய தேசத்து சல்லியர் (களப்பிரர்) என்று உள்ளது : இடங்கை வலங்கை பட்டயம் (கீழ்த்திசை சுவடிகள் நூலகம், சென்னை) வேட்டுவர் துணையினமான முத்துராசாக்கள் பெரும்பிடுகு முத்தரையர் கல்வெட்டு முத்தரையர்கள் "கள்வர் கள்வன்" அதாவது கள்ளர்களை அடக்க வந்தவர்களென்கிறது.

2.கங்கபரிபாலன் சிஷ்டப்பள்ளி - ப்ருஹ்ம வன்னியர் - பந்தமுட்டு பள்ளி - தென்பெண்ணையாறு முதல் காவேரி வரையில் உள்ளவர்கள் - இவர்களும்  1692ல்  சேல (சங்ககிரி) க்குக் குடி பெயர்ந்தனர்.பஹமண சுல்தான் படையெடுப்பு காாலத்தில் அரியலூர் 
பகுதியிலிருந்து கிளர்ச்சி செய்து தஞ்சம் புகுந்தனர்.

சமணர்,பௌத்தர்களாக வந்த இவர்கள், பின்னர் குருவான ருக் வேதம், யக்ஞநாராயண திக்ஷிதர் மகன் ராசப்புள்ளையர் ஆகியவரால் மீண்டும் மதத்துக்குத் திரும்பினர் எனத் தெரிகிறது. இரவாசனூர் (எலவானாசூர்)  https://goo.gl/maps/GecqEFwtDCM2 இவரது ஊர் என்கிறது பட்டயம். பெயர் பெரியசாமி அய்யர். பட்டயம் எழுதப்பட்டது வெங்கடபதி ராயர் காலம். அவரது குரு தாத்தாச்சாரியார்


அரசப்பள்ளியர், கொங்கதேசத்தில் மூன்று மடங்களில் சிஷ்யர்களாக உள்ளனர். நாமம் இடுபவர்கள் அய்யங்கார்களை குலகுரு என கொண்டுள்ளனர்.

அவை:
1. மூலகுரு பாலயானந்த சுவாமிகள் - லிங்கதாரி மதம் - அரசவன்னியர்
2. காவேரிபுரம் சுவாமிகள் - வம்சம் முடிந்தது - சாமாதி உள்ளது
3. நாமம் இடுபவர்கள் அய்யங்கார்களை குலகுரு என கொண்டுள்ளனர்

 1. தடாகத்தில் விழுந்த மஹாலிங்கத்தை கரையேற்றி வைத்தவருமான மூலகுரு மயிலாடுதுறை பாலயானந்த ஸ்வாமிகள் மடம்
ஆலாம்பாளையம்

British record: https://books.google.co.in/books?id=Wmtkai-L6I0C&pg=PA272&lpg=PA272&dq=francis+buchanan+palli&source=bl&ots=5Z5jQyl3t1&sig=Uzn9NuxPBjaL-VPALMggv4x4AUs&hl=en&sa=X&ved=0ahUKEwiNyaO-tOTQAhXFKY8KHfsDBUoQ6AEIKDAC#v=onepage&q=francis%20buchanan%20palli&f=false

நவாப் ஜுல்பிகர் கான் நுஸ்ரத் ஜங்,1692இல், உண்மை வாரிசை மைசூரு சமஸ்தானம் அந்தியூருக்குத் துரத்திய பொது,கூடவே குலகுருக்களான பாலையானந்தரும் வந்துவிட்டார்.அவருக்கு பதிலாக,போலி வாரிசு மற்றும் போலி மடாதிபதி நியமிக்கப்பட்டனர்.அந்த போலி மடாதிபதி குன்னம்பாளையம் சிவஞான பலயர் 1695இல் நியமிக்கப்பட்டு,இனாம் கிராமமான பொம்மபுரம் அவருக்கு நவாபால் தரப்பட்டது.
1695இல் அமர்ந்த குன்னம்பாளையம் போலி பாலையானந்தர் 
நாவாபால் ஆதரிக்கப்பட்டவர் 




மேலும்,பிரெஞ்சு பிரீமேசானிய ஜாக்கோபின் கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் டூப்ளே ஆதரவு பெற்றார் ஆறாவது ஆதீனம்.ஏழாவது ஆதீனத்தை ஆலாம்பாளையத்தார் நீக்கிமடத்தை மீட்காமலிருக்க  நவாப் காவலர்களை நியமித்தார் 






காசிவாசி 30வது பூர்வகுருவுடன் தற்போதைய குரு



தற்போதைய குரு ஆலாம்பாளையம் மடம் 30வது பட்டம்
ஸ்ரீலஸ்ரீ மு. சிவஞானதேசிகர் சுவாமிகள்

சிஷ்யர்கள்:
1. கன்னார் செட்டியார் - அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம், அவினாசிபாளையம், பொன்னம்பாளையம், கன்னார்பாளையம், தொண்டாமுத்தூர்
2. வன்னியர் - அரச, பந்தமுட்டில் ஒரு பிரிவினர் மற்றும் அரசில் குருநாதசுவாமி கோயில் பிரிவு - கொங்கதேசம், கொள்ளேகாலம் மற்றும் திருச்சி தாரானூர், மதுரை மூனுசாலை சிம்மக்கல் வீதி, பெண்ணாகரம்.

விலாசம்:
ஸ்ரீலஸ்ரீ மு. சிவஞானதேசிகர் சுவாமிகள்,
ஆலாம்பாளையம் (அஞ்சல்),
அந்தியூர் (வழி),
ஈரோடு - 638 501

போன்: 04256 - 251892
செல்: 98421 72962

2. காவேரிபுரம் மடம் 
சாமாதி மட்டும் உள்ளது - வாரிசு இல்லையென கேள்வி

3.கள்ளகவுண்டம்பாளையம் மடம்,குள்ளவீரம்பாளையம் மடம்,அரசம்பாளையம் மடம்,பணிக்கம்பட்டி மடம் 



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

குலகுருவின் மகத்துவம்

சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ காலா...