Thursday, September 3, 2009

கொங்கு குலகுருக்கள் 23. கத்தங்காணி மடம்



ஆறுசெஞ்சடை வேதாந்த மூர்த்தி பண்டித குருஸ்வாமிகள்






மரம் பிடுங்கிப் பட்டக்காரர் செப்பேடு
மூலம்

ஹரிஓம் சுபமஸ்து சுவஸ்திஸ்ரீ மகாமண்டலேசுவரன் அரியதள விபாடன் பாஷைக்குத் தப்புவராய கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு குடாதான் துலுக்கர்ரள விபாடன் துலுக்கர்மோகந் தவிள்த்தான் ஒட்டியர்தள விபாடன் ஒட்டியமோகந் தவிள்த்தான் மும்மண்டல ஸ்தாபனாதிபன் கோதண்டராமன் கலியுகராய கண்டன் எம்மண்டலமும் கொண்டு ழுந்த சிம்மாசனாதிபன் அசுவபதி கெசபதி நரபதி சத்திரபதி அரிச்சந்திரசேகர மகாராயர் பிரபுடதேவ மகாராயர் அச்சுததேவமகாராயர் விருபாட்சிதேவ மகாராயர் மல்லிகார்ச்சுனதேவ மகாராயர் யிப்படி மைசூர் சமஸ்தான தளபதிளோடு தளகர்த்தராகிய

விசையாத்புதய சாலிவாகன சகாப்தம் ஆயிரத்து நஊற்று நாற்பத்தாறாம் வருஷம் ஆயிரத்து நாற்பத்தாறாம் வருஷம் கலியுக சகாப்தம் நாலயிரத்து முன்னூற்று இருபத்தைந்தாம் வருஷம் சித்திரபானு வருஷம் மைசூர் நஞ்சராய உடையார் அதிகாரத்தில் செம்புத்தீவில் திராவிட தேசத்தில் கொங்கு மண்டலத்தில் தென்கரை வீரசோழ வளநாட்டில் கத்தாங்கண்ணி அமுக்கயம் முகுந்தனூர் இநத மூன்று கிராமமு மூவராசாக்களால் நாளதுவரை ஆண்டு கொண்டிருக்கிற ஆறுசெஞ்சடை வேதாந்த மூர்த்தியானவர் முகுந்தனூர் குரக்குத்தளி ஆளுடைய நாயனாராகிய சுக்கிரீசுவரசுவாமி கோயில் சிகஸ்தானதைக் கண்டு யிது சீறண உத்தாரணம் செய்கிற கடமை ராசாக்களைச் சேர்ந்ததல்லவோ என்று மைசூர் சமஸ்தானமாகிய நஞ்சராய உடையார் சமூகத்துக்கு நிரூபம் எழுதினார்.

அது கேட்டு ராசமானிய ராசஸ்ரீ நஞ்சராய உடையார் தம்முட தளபதிகளோடுகூடிப் பயணம் புறப்பட்டு முகுந்தனூருக்கு வருகிற வழியில் தொரவலூர் கண்டது. அங்கே வந்து பாளையம் இறங்கி அங்கே தங்கியிருந்த மற்றாநாள் முகுந்தனூர் வந்து சேர்ந்து ஆறு செஞ்சடை வேதாந்த மூர்த்தியைக் கண்டு பேசிக்கொண்டு இருவகைப்பேரும் கூதி கோவிலெ சுத்திப் பார்த்து நல்ல முகூர்த்தமிட்டு வேலை துடங்கி நடந்து வருகுறபோது

ராசா முகுந்தனூருக்கு நல்லாத்திலே ஏரி போட்டு குளம் உண்டாக்கி கோவிலும் குளமும் வேலை நடத்த வருகுறபோது ராசா மைசூருக்கும் முகுந்தனூருக்கும் போகவர தங்கல் செய்து போறதாயிருக்கும் போது தொரவலூருக்கு அதிபனாகிய பால வேளாளரில் அபிஷேக கவுண்டன் அங்கமுத்துக்கவுண்டன் லிங்கக்கவுண்டன் அத்தப்பகவுண்டன் யிந்த நாலு பேரு ராசபோக வர தங்கல் வைக்கும்போது சறுப்பராசி செய்து வருவார்கள்.

இப்படி யிருக்குற காலத்திலே தொரவலூருக்குப் பக்கக் கிராமங்களிலேயிருக்கிற வேட்டுவக் கவுண்டர்கள் யிந்த தொரவலூர் பாலவெளாளக் கவுண்டர்கள் பேரில் ஒரு வாக்கு விஷயங்களிலே பவிறிஷமுண்டாகி யிவர்கள் பேரில் குமுக்கு கூடி வந்து யிவர்களைச் சம்மாறம் பண்ண எத்தனிச்சார்கள். அநதத் தகவல் இவர்கள் அறிந்து முகுந்தனூருக்கு வந்து கோயில் வேலைத்தரப்பிலே யிருக்கிற ராசாவைக் கண்டு அறிக்கை செய்தார்கள். அப்போது ராசாவுக்கு அதிக கோபமாயி நம்மிட அதிகாரம் அப்படி ஆச்சுதோ என்று ஆக்கிரமித்து தம்முட தண்டு தாணையங்களுக்கு ஆளனிப்பி வரவழைத்து அவர்களைச் சரிப்படுத்தி விடுகிறே னென்றார்.

அது கேட்டு யிவர்கள் தங்கள் தண்டு தாணையம் வாரதுக்குள்ளாக எங்களைச் சரிப்படுத்தி விடுவார்களென்று சொன்னார்கள். அது கேட்டு ராசாவும் முகுந்தனூரு குருவாகிய ஆறு செஞ்சடை வேதாந்த மூர்த்தியை வரவழைத்து ஆலோசனை பண்ணினார். அது கேட்டு ஆறு செஞ்சடை வேதாந்த மூர்த்தியும் தம்முட தானக்கிராமமாகிய முகுந்தனூரில் காணி குடுத்து வைத்திருக்கிற சீஷப் பிள்ளைகளாகிய செல்லகுலத்தில் செம்பெரிச்சாக்கவுண்டனையும் தூரன் குலத்தில் முத்துக்கவுண்டனையும் பவளகுலத்தில் வாணவராயக்கவுண்டனையும் வரவழைத்து யோசனை செய்யும்போது அதிலே செல்லகுல செம்பெரிச்சாக்கவுண்டன் என்பவன் சுவாமியாரைப் பார்த்து சுவாமி தங்களுடைய மந்திரசித்தி அனுக்கிரகம் செய்து குடுத்தால் ஒரு கை பார்க்கிறோம் என்றான்.

அப்போது சுவாமியாரானவர் செம்பெரிச்சாக்கவுண்டனை ஸ்நானஞ் செய்து கிட்டவரச்சொல்லி மரம்பிடுங்கி யுத்தம் பண்ணும்படியாக மந்திர உபதேசம் பண்ணி ஒரு மூலிகையும் குடுத்து விபூதியளித்து அனுப்பிவச்சார்.

அப்போது செம்பெரிச்சாக்கவுண்டன் சிறிது குமுக்குடனே போயி சுவாமியார் சொன்ன மந்திரத்தை உச்சரித்து மரங்களைப் பிடுங்கிக்கொண்டு போறபோது எதிரிப்படை பயந்துபின்வாங்கினார்கள். அதுகண்டு பின்னும் சிலசில மரங்களைப் பிடுங்கிக்கொண்டு படையிலே புகுந்து மோதியடிக்கிறபோது படைக்குத் தலைவனாகிய வேட்டுவன் வணங்காக்கவுண்டன் கண்டு எதுத்தான் அவனைக்கண்டு மரத்தினாலே சிதறடிச்சு மரணப்படுத்தினான் அதுகண்டு படைமுறிந்து ஓடிப்போனார்கள் யிவர்களும் தங்கள் குமுக்குடனே முகுந்தனூருக்கு வந்து சுவாமியாருடைய கிருபையினாலேயும் தங்களுடைய வரத்தினாலேயும் செயம்பண்ணி வந்தோம் என்றார்கள்.

அதுகேட்டு ராசாவும் வெற்றிமாலை சூட்டி வந்தாயே என்று சந்தோஷப்பட்டு பாலவேளாளராகிய அபிஷேகக்கவுண்டன் வகையறா நாலுபேரையும் வரவழைத்து வைத்துக்கொண்டு உங்களுடைய எதிரிகளை நம்மாலே விலக்கப்பட்டதல்லவே யிந்த சுவாமி யாருடைய மந்திர சக்தியினாலேயும் யிந்த செம்பெரிச்சாக்கவுண்டனாலேயும் வெற்றியாச்சுதல்லவோ யிப்ப அவர்களுக்கு என்ன குடுக்கிறீர்களென்று கேட்கிறபோது

தங்கள் சித்தத்துக்கு சம்மதமானபடி குடுத்துவிடுகிறோமென்றார்கள் அதுகேட்டு ராசா உங்களுக்கு முன் மூவராசாக்கள் வேட்டுவன நீங்கள் செயித்து உங்களுக்கு காணி குடுத்த தொரவலூரில் முகுந்தனூர் செல்லங் குலத்தானாகிய செம்பெரிச்சாக்கவுண்டனென்பவன் முன்பகை தீர்த்து மரம்பிடுங்கி செயம்பண்ணிவந்தபடியினாலே மரம்பிடுங்கி செம்பெரிச்சாக்கவுண்டனென்று பேருங்குடுத்து சாதியாவுக்கும் மதாசாரப்படிக்கி விசாரணை பட்டக்காரனாகப் பதினெட்டு விருதுங்குடுத்து பட்டங்கட்டி நாட்டுகிறோம். மானியங்கள் அவனுக்கும் அவன் குருவாகிய ஆறு செஞ்சடை வேதாந்த மூர்த்திக்கும் இந்தத் தொரவலூரில் அரை வரிசை காணி குடுத்துச் சந்திராதித்தர் உள்ளவரைக்கும் நடத்திவருகிறோமென்று தாம்பிர சாசனத்தில் எழுதிக் கொடுக்கச் சொல்லிச் சொன்னார்.

நல்லதென்று சம்மதிச்சு எழுதிக்குடுக்கும்போது ராசா சொன்னது அவர்களுக்கு காணி குடுத்ததுக்கு நடக்கிற வரிசையென்னயென்றால் ஆறு செஞ்சடை வேதாந்த மூர்த்திக்கு இந்தத் தொரவலூரிலுள்ள் தேவதைகளுக்கு பிரதிஷ்டை கும்பாபிஷேகம் அவரைச் சார்ந்தது. அவர் வகையறாவில் பூசையும் நம்பியூர் கெடாரை முதல் அவர் மானுபத்தில் நடக்கும்படி வைத்திருக்கின்றோம் அவருக்கு மானியமும் விடுறோம் நீங்கள் அவரை மோட்ச குருவாக வைத்துக்கொண்டு வருஷம் ஒன்றுக்குக் கட்டின வீட்டுக்கு கால் ரூபாய் கொடுத்து வரவும். அது தப்பிதம் பண்ணும் காலையில் ஒரு தோஷம் கிடைக்கும் அது அறிந்து நடந்து கொள்ளவும்

மரம்பிடுங்கிப் பெரிச்சாக்கவுண்தனுக்கு நாமள் பட்டங்குடுக்கிறபடியினாலே நம்ம சிவத்தலத்துக்கு முந்திய விபூதியும் ராச தெரிசனமும் நடத்திவரவும் உங்களுக்கு முப்பாட்டு மிராசு படைக்கலமிராசு உங்களைச் சேர்ந்தது பாக்கு வெத்திலை மட்டும் சன்னதி சபையில் பட்டக்காரன் வந்திருந்தால் குடுத்துப்போட்து எடுத்துக்கொள்ளவும் அல்லாத வரையில் நேர்ந்தபடி குடுடுத்துக்கொள்ளவும்

என்று ராசா சொல்லவும் அந்தப்படிக்கு பாலவேளாளகவுண்தர்கள் சம்மதிச்சு அபிஷேகக்கவுண்தன் அங்கமுத்துக்கவுண்டன் லிங்கக்கவுண்டன் அத்தப்பகவுண்டன் யிவர்களெல்லாம் நான்கு பேர்களும் கூடி ராசாவை வைத்துக்கொண்டு சாமியாரும் மரம்பிடுங்கிப் பெரிச்சாக்கவுண்டனும் கையெழுத்து வைத்து எழுதிக் குடுத்த தாம்பர பட்டயம்

அதன் பிறகு ராசாவும் ஆறு செஞ்சடை வேதாந்த மூர்த்தி கையினாலே மரம்பிடுங்கிப்பெரிச்சாக்கவுண்டனுக்கு கலியுகம் நாலாயிரத்து இருபத்தைந்து வருஷம் சாலிவாகன சகாப்தம் ஆயிரத்து நூற்று நாற்பத்தாறு வருஷம் சித்திரபானு வருஷம் வையாசி மாதம் பதினைந்தாம் தேதி சுக்கில பட்ச சுக்கிரவாரமும் தெசமியும் அசுபதி நட்சத்திரமும் சுபநாமயோகமும் கெறச வாகரணமும் பெற்ற சுபதினத்தில் அபிஷேகனாதசுவாமி சன்னிதியில் பட்டம் வைத்து குடை, குதிரை, பல்லாக்கு விசிறி வெண்சாமரை மூலை ஆயுதங்களும் வெகுமானங்குடுத்து குடியேற்றிவைத்து முகுந்தனூரிலே வேலை நிறைவேறச்செய்து பிரதிஷ்டை கும்பாபிஷேகம் செய்துவைத்து ஆறு செஞ்சடை வேதாந்த மூர்த்திக்கு அந்தப்படிக்கு வெகுமானங்குடுத்து முகுந்தனூரிலிருந்த அண்ணமார்சுவாமியை தொரவலூரில் கட்டி இந்த சா,இயார் கையினாலே பிரதிஷ்டை கும்பாபிஷேகம் செய்யச் சொல்லி மரம்பிடுங்கி பெரிச்சாக்கவுண்டனைக் கூப்பிட்டு உங்கள் குருவாகிய ஆறு செஞ்சடை வேதாந்த மூர்த்தியாலே உங்களுக்கு காணியும் மேன்மையும் கிடைத்தபடியினாலே அவருக்கு நீங்கள் வரிசைக் காணிக்கை வீடொன்றுக்கு நாகரம் பணம் அஞ்சு பணம் குடுத்து வரவுமென்று கட்டளையிட்டு

அபிஷேககவுண்டன் வகையராப் பேர்களை கூப்பிட்டு இந்தப்படிக்கு யாமிருந்து செய்த காரியத்துக்கு எப்போ நிந்தனை செய்கிறீர்களோ அப்ப உங்கள் குடி நசுஞ்சு போகும் கங்கைக் கரையிலே காரம்பசுவையும் பிராமனரையும் கொன்ற தோஷத்தில் போகக்கடவீர்கள் ஆகையால் இதை பரிபாலனம்பண்ணி வந்தீர்களானால் சகல பாக்கியமும் சகல விசயமும் பெற்று சுகமாயிருப்பீர்கள் என்று ராசா இருந்து இந்தப்படிக்கு எழுதிக் கொடுக்கச் சொல்லி வாங்கிக் குடுத்த தாம்பர சாதனப்பட்தயம் யிதுக்கு சாட்சி ஆண்டிமன்றாடி சோழியாக்கவுண்தன் அறிவேன் ஆண்டவர் துணை.

காணிகள் - கோத்திரங்கள்:
சிவ பிராமணர்கள்:
அல்லாளபுரம் - மார்க்கண்டேய கோத்திர ஸ்தானிக கோயில் சிவாச்சாரியார்கள்

கொங்க வெள்ளாளர்கள்:
1.கத்தாங்காணி-வெண்டுவ கோத்திரம் (தோக்கவாடி, தாளக்கரை - காளியம்மன்)
2. கத்தாங்காணி - பண்ண கோத்திரம் - அழகு நாச்சியம்மன் (பெரியபாளையம்)
3. கத்தாங்காணி - செவ்வந்தி கோத்திரம் (இலுப்புலி-பொன்னாச்சி அம்மன்)
4. பிடாரியூர் - கூரை கோத்திரம் (முருங்கையம்மன்)
5. பிடாரியூர் - பிறழந்தை கோத்திரம் (முருங்கையம்மன்)
6.முகுந்தனூர் (சர்க்கார் பெரியபாளையம்) - தூர கோத்திரம் + குப்பிபாளையம் (நம்பியூர்)
7.முகுந்தனூர் (சர்க்கார் பெரியபாளையம்) - செல்ல கோத்திரம்
8. அமுக்கயம் - பிறழந்தை கோத்திரம்
9. தொறவலூர் - செல்ல கோத்திரம் (அண்ணமார்)

கொங்க கைக்கோளர் (பெருந்தாலி):
அமுக்கயம் - கரிய காளியம்மன் கோயில்

வெத்தலக்கார  தேவர்கள்:
1. கொடுமணல் - தங்கம்மன் கோயில் (பெரிச்சிபாளையம்)
2. வெள்ளலூர் - அரசண்ணன் கோயில்
வெத்தலக்கார தேவர் (எ) அகம்படிய தேவர் (மேலும் கொங்கு நாட்டிலுள்ள அகம்படிய தேவருக்கு வலையபாளைய மடமும் குலகுருவாக உள்ளார் )

பாண்டிய வெள்ளாள பிள்ளைமார்:
அமுக்காயம் - கரியகாளியம்மன்

பவள கோத்திரத்து வாணவராயர் (சமத்தூர் ஜமீன்) குலகுரு என்று பட்டயம் சொல்கிறது.

முகவரி:
மகன்:
S.நல்மணி வேதாந்த பண்டித குருஸ்வாமிகள்,
34/17, செல்வ விநாயகர் கோவில் வீதி,
குமரானந்தபுரம்,
திருப்பூர் - 2.
செல்: 99761 77007
போன்: 0421 - 2472535

பெரியவர்:
நல்மணி வேதாந்த பண்டித குருஸ்வாமிகள்
வரசித்திவினாயகர் ஆலயம்,
ராம் நகர் ஒன்றாம் வீதி,
திருப்பூர்.
போன்: 0421 - 2208010

தற்பொழுது திருப்பூர் அருகிலுள்ள சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீச்வரர் கோயிலில் ("கொங்கில் குருமால் குரக்குத்தளியாய்" என்று சுந்தரரால் பாடல் பெற்ற ஸ்தலம்) உள்ளார் .

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

குலகுருவின் மகத்துவம்

சேரர் கொங்கதேச சைவ சித்தாந்த குருபரம்பரை (கிராமிய ஆதி சைவ, சோழிய மஹா சைவ மடங்கள்): ஶ்ரீ நந்திதேவர் | | | திருமூலதேவ நாயனார் | | | ஶ்ரீ காலா...